தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சேப்பாக்கத்தில் இன்று ஜடேஜாவுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் விளையாடும் இன்றைய ஆட்டத்தில் ஜடேஜாவுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தவுள்ளனர்.

News image
Updated On :26 மார்ச் 2024, 9:28 am

கடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜாவுக்கு ரசிகர்கள் இன்று மரியாதை செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. மழை அடிக்கடி குறுக்கிட்டதால் 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டது. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜடேஜா சிக்ஸர், பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இந்த பரபரப்பான ஆட்டத்தின் வெற்றித் தருணம் இன்றுவரை சென்னை ரசிகர்களால் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - குஜராத் இடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை ரசிகர்கள் ஜடேஜாவுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவுள்ளனர்.

இன்றைய ஆட்டத்தை நேரில் காண வரும் ரசிகர்கள், ஆட்டத்தில் 8-வது நிமிடத்தில், அதாவது சரியாக 7.38 மணிக்கு தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று ஜடேஜா, ஜடேஜா என்று கோஷமிட கோரி இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றது.

ஜடேஜாவின் ஜெர்ஸி நம்பர் 8 என்பதால், சரியாக 8-வது நிமிடத்தில் ரசிகர்கள் மரியாதை செலுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.