பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று மாலை தொடங்கி நேற்றிரவு முடிவடைந்தது. இதில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
ராவல்பிண்டியில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 44.1 ஓவர்களில் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக மாட் ரென்ஷா 61, மேத்யூ ஷார்ட் 55 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 42.3 ஓவர்களில் 202/5 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக பாபர் அசாம் 69, காசி கோரி 65 ரன்கள் எடுத்தார்கள்.
இந்தப் போட்டியில் பந்துவீச்சில் அசத்திய பாகிஸ்தானின் அறிமுக வீரர் அராஃபத் மின்ஹாஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி ஜூன் 2ஆம் தேதி லாகூரில் நடைபெற இருக்கிறது.
Summary
Pakistan won by 5 wkts against australia in First ODI
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










