மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஹார்திக் பாண்டியாவுக்கு 10% அபராதம்..! ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கல்!

மும்பை அணியின் கேப்டனுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து...

News image

ஹார்திக் பாண்டியா. - படம்: ஏபி

Updated On :21 மே 2026, 11:27 am IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதமும் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு ஈடர்ன் கார்டன் திடலில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 147/8 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் 148/6 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் மும்பை அணியினர் குறிப்பிட்ட நேரத்தை விடவும் மெதுவாகப் பந்துவீசியதால் அதன் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு லெவல் 1 குற்றத்திற்காக போட்டிக்கான ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும்போது ஹார்திக் பாண்டியா 10ஆவது ஓவர் நான்காவது பந்தின்போது ஸ்டம்பின் மேலிருந்த பெயில்ஸ்களை தள்ளிவிடுவார். இது ஐபிஎல் விதிமீறல் 2.2ன் படி ஹார்திக் பாண்டியாவுக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆறு சீசன்களாக கோப்பை வெல்லாமல் இருக்கிறது. அத்துடன் இந்த சீசனில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று மோசமாகவும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Hardik Pandya fined 10 per cent of match fee, handed one demerit point for knocking bails off

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.