மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கைரன் பொல்லார்டு நான்காம் நடுவரை ஆபசமாகத் திட்டியதற்காக போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபாரதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுக்க, மும்பை 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 19ஆவது ஓவரில் கைரன் பொல்லார்டு நான்காவது நடுவரை நோக்கி ஆபாசமாகத் திட்டினார் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தக் காரணத்தினால் ஐபிஎல் விதிமுறைகள் 2.3ன் படி லெவல் 1 குற்றத்தினால 15 சதவிகிதம் அபராதமும் 1 தகுதியிழப்புப் புள்ளியும் வழங்கப்படுகிறது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
நடுவர் பங்கஜ் தர்மாணி விதித்த இந்த அபராதத்தை பொல்லார்டு ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னதாக மும்பை அணிக்காக பொல்லார்டு விளையாடும்போதும் பலமுறை அபராதம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Pollard fined for using abusive language for fourth umpire .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடப்பு ஐபிஎல் சீசன் பாதியிலேயே மும்பை அணியிலிருந்து விலக முடிவெடுத்த ஹார்திக் பாண்டியா?

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!

மும்பை அணிக்கு 206 ரன்கள் இலக்கு!







