ஆட்ட நாயகன் விருது வென்ற தில்லி கேபிடல்ஸ் அணியின் இந்த சீசனில் முதல் போட்டியில் விளையாடிய மாதவ் திவார் தன்னை 100 சதவிகிதம் பந்துவீச்சாளர் என்றும் 100 சதவிகிதம் பேட்டர் என்றும் கூறலாம் எனப் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
நேற்றிரவு நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 210/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 19 ஓவர்களில் 216/7 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் தில்லி வீரர் மாதவ் திவாரி பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 8 பந்துகளில் 18 ரன்களும் அடித்து அசத்தினார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் 2025 ஐபிஎல் சீசனில் மும்பைக்கு எதிரான போட்டியில் முதல்முறையாகவும் கடைசியாகவும் விளையாடினார். பின்னர், இந்த சீசனில் முதல்முறையாக பஞ்சாப் அணிக்கு எதிராக களம்கண்டார்.
பேட்டிங், பந்துவீச்சு என அசத்தி ஆட்ட நாயகன் விருதுவென்ற மாதவ் திவாரி பேசியிருப்பதாவது:
எனக்கு வாய்ப்பளித்த நிர்வாகத்துக்கு நன்றி. வெற்றிப் பெற்ற அணியில் இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைக்காதபோது பயிற்சியில் ஒவ்வொரு முறையும் முன்னேற்றம் அடைய முயற்சிக்க வேண்டும்.
முனாஃப் படேல் உடன் இணைந்து அதிகமாக பயிற்சி எடுத்தேன். பந்துவீச்சிலும் உழைத்தேன். பேட்டிங் பயிற்சியாளருடன் இணைந்து என்னுடைய ரேஞ்சில் இருந்தால் அடிக்கும் பழக்கத்தை அதிகரித்தேன். அணிக்குப் பங்களிப்பதில் மகிழ்ச்சி.
என்னைப் பொறுத்தவரை நான் 100 சதவிகிதம் பந்துவீச்சாளர், 100 சதவிகிதம் பேட்டர் என்பேன். இந்த ஆடுகளத்தில் லெந்த் பந்துகளுக்கு நல்ல உதவியாக இருந்தது. அதனால், அப்படியே பந்துவீசினேன். அதில் வைடு பந்துகளையும் ஷார்டு பந்துகளையும் கலந்து வீசினேன்.
நான் 4 ஓவர்கள் பந்துவீசியதில் ஆச்சரியமில்லை. நான் ஏற்கெனவே இதற்காக தயாராகி இருந்தேன். என்னுடைய இரண்டாவது ஓவரில் ரன்கள் சென்றிருந்தால் அக்ஷர் படேல் வீசியிருப்பார். அதிஷ்டவசமாக நன 4 ஓவர்களை வீசினேன்.
என்னுடைய பேட்டிங் பயிற்சியாளர் ஐயான் பெல் என்னிடம் நல்ல பவர் இருக்கிறது. அதனால், வித்தியாசமாக எதுவும் செய்யாமல் உறுதியாக நின்று, பந்துகளைப் பார்த்து விளையாட வேண்டும் என்றார்.
Summary
I would like to say I’m 100% bowler, 100% batsman says DC Player of the Match Madhav Tiwari.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிற்சிதான் காரணம்... ஆட்ட நாயகன் முகமது சிராஜ் பேட்டி!

தன்னம்பிக்கை நாயகன்: சீசனில் முதல் பேட்டிங் வாய்ப்பிலேயே ஆட்ட நாயகன் விருதுவென்ற மணீஷ் பாண்டே!

பொறுமையும் எளிமையும்... ஆட்ட நாயகன் விருது வென்ற ககிசோ ரபாடாவின் பேட்டி!







