அதிரடியாக பேட்டிங் செய்துவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3.2 ஓவரில் 50 ரன்களைக் கடந்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால் மிகுந்த சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் சன்ரைசர்ஸ் 12 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (287/3) குவித்த அணியாக இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்தப் போட்டியில் 300 ரன்களை குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடன் இஷான் கிஷன் உடன் விளையாடி வருகிறார்.
Summary
Fifty in 3.2 Overs: Will Sunrisers Score 300 Runs?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாட் கம்மின்ஸ் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த சூர்யவன்ஷி..! 16 பந்துகளில் அரைசதம்!

எலிமினேட்டர் போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் பந்துவீச்சு!

100% வெற்றி... சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபாரமான சாதனை!







