இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்துள்ள மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மாவுடன் தானும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அறிமுக சீசனில் மகேந்திர சிங் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அதன் பின், கடந்த 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில், நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
அகமதாபாதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி மற்றும் போட்டியை நடத்தும் நாடு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது என இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.
தோனி, ரோஹித் வரிசையில்...
மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், இந்திய அணிக்காக கோப்பையை வென்று கொடுத்துள்ள மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மாவுடன் தானும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2024 ஆம் ஆண்டு மற்றும் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் என தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சிறப்பான உணர்வைத் தருகிறது. கடந்த முறை உலகக் கோப்பையை வென்றபோது, நம்முடைய சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வென்றால் சிறப்பாக இருக்கும் என நினைத்தோம்.
அடுத்த இலக்கு 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது. இந்திய அணி வலுவாக உள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று, அதே ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றாலும் அது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகியோரது வரிசையில் நானும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இவர்களுடன் இணைந்துள்ள தருணத்தை நான் மெல்ல உணரத் தொடங்குகிறேன். மிகப் பெரிய வீரர்களான இவர்களுடன் நானும் இடம்பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணி அதிக கோப்பைகளை வெல்ல தொடர்ந்து உதவுவேன் என்றார்.
கடந்த 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. நாட்டுக்கு கிடைத்த முதல் மிகப் பெரிய கோப்பை இதுவாகும்.
2007 ஆம் டி20 உலகக் கோப்பை மட்டுமின்றி, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரிலும் மகேந்திர சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Summary
Suryakumar Yadav said he is very happy to join Mahendra Singh Dhoni and Rohit Sharma in winning the trophy for the Indian team.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்

கேலோ இந்தியா கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் அணி சாம்பியன்

ஒரே நேரத்தில் 2, 3 இந்திய அணிகளை விளையாட வைக்கலாம்..! சூர்யகுமார் அதிரடி கருத்து!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



