மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா? ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

News image

அபிஷேக் சர்மா - படம் | AP

Updated On :3 மார்ச் 2026, 4:39 pm

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் நாளை மறுநாள் (மார்ச் 5) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது குறித்து ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.

இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் அவர் பேசியதாவது: மனதளவில் போட்டியில் சிறப்பாக செயல்பட தயாராக இருக்கிறாரா என்பதை அணி நிர்வாகம் அவருடன் பேச வேண்டும். தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷனை களமிறக்கலாம். ஆனால், அபிஷேக் சர்மாவின் மீது நம்பிக்கை இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் அபாரமாக விளையாடியிருக்கிறார்.

வான்கடே திடலில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடியுள்ளதையும் மறுக்க முடியாது. கடந்த காலங்களில் வான்கடேவில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். மிகப் பெரிய சதத்தினை அவர் வான்கடேவில் விளாசியுள்ளார் என்றார்.

கடந்த ஆண்டு வான்கடேவில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Ravi Shastri has spoken about Abhishek Sharma playing in the semi-final match against England in the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.