திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நான் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும்: மே.இ.தீவுகள் கேப்டன்

இந்தியாவுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் தான் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டுமென மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

News image

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் - படம் | AP

Updated On :2 மார்ச் 2026, 2:58 pm

இந்தியாவுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் தான் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டுமென மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று (மார்ச் 1) நடைபெற்ற வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டத்தால் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் தான் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டுமென மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் சாய் ஹோப் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் என்மீது நானே பழிசுமத்திக் கொள்ளும் இடத்தில் இருக்கிறேன். நான் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்திருக்க வேண்டும். டாப் ஆர்டரில் பேட்டிங் செய்யும்போது, அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்திருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அது நடக்கவில்லை.

முக்கியமான ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்டர் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், பின்வரிசையில் களமிறங்கும் வீரர்களும் தடுமாறுவார்கள். ஆனால், நான் மோசமாக விளையாடியதாக நினைக்கவில்லை. நான் நன்றாக விளையாட முயற்சி செய்து விளையாடினேன். ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசினார்கள்.

பவர்பிளேவில் 65-70 ரன்கள் குவிக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால், விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்திருந்தோம். எங்களிடம் நல்ல பேட்டிங் ஆர்டர் இருப்பதால், பவர்பிளேவில் போதுமான ரன்கள் குவித்ததாகவே நினைக்கிறேன். ஆனால், எங்களது திட்டங்களை சில இடங்களில் சரியாக செயல்படுத்த முடியவில்லை என்றார்.

இந்தியாவுக்கு எதிரான இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் கேப்டன் சாய் ஹோப் 33 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

West Indies captain Shai Hope has said that he should have played aggressively in the do-or-die match against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.