ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மூன்றாவது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :6 ஜூலை 2026, 7:12 pm IST

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் தங்களுக்குள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. தொடரின் முதல் போட்டிக்கு மழை காரணமாக முடிவு எட்டப்படாத நிலையில், மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், நாட்டிங்ஹமில் நாளை (ஜூலை 7) நடைபெறும் மூன்றாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கிய அதே பிளேயிங் லெவனுடன் இங்கிலாந்து அணி மூன்றாவது போட்டியில் விளையாடுகிறது.

மூன்றாவது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் விவரம்

பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், டாம் பாண்டன், சாம் கரண், வில் ஜாக்ஸ், லியம் டாஸன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், ஜோஷ் டங்.

Summary

The England cricket board has announced the playing XI for the third T20 match against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.