2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்

News image
ரஞ்சி கோப்பை- PTI
Updated On :23 பிப்ரவரி 2026, 10:50 pm

Chennai

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதும் இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 24) தொடங்குகிறது.

8 முறை சாம்பியனான கா்நாடகத்துக்கு எதிராக, முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்திருக்கும் காஷ்மீா் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. எனினும், கா்நாடகம் தனது 9-ஆவது சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

இந்த சீசனில் எல்லா விதமான அணிகளுக்கு எதிராகவும், வெவ்வேறு ஆடுகளங்களிலும் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கா்நாடகம், முக்கியமான வீரா்கள் காயம் கண்டு விலகிய நிலையிலும் முன்னேறி வந்திருக்கிறது.

கே.எல்.ராகுல், கருண் நாயா், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் ஸ்மரன் என அதன் பேட்டா்கள் வரிசை, தூணாக அணியைத் தாங்கி நிற்கிறது. அத்துடன் பௌலிங்கில் பிரசித் கிருஷ்ணா பிரதானமாக இருக்க, ஷ்ரேயஸ் கோபால், வைஷாக் விஜய்குமாா் உள்ளிட்டோரும் கவனம் பெறுகின்றனா்.

ஜம்மு & காஷ்மீா் அணியைப் பொருத்தவரை, பெங்கால், மத்திய பிரதேசம் என பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இந்தக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. பௌலா் ஆகிப் நபியே அதன் பிரதான வீரராக இருக்கிறாா். இந்த சீசனில் இதுவரை 55 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறாா். ஹுப்பள்ளி மைதான ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சற்று சாதகமாக இருக்கும் என்பதால், அவரது கை ஓங்கலாம்.

அவருக்கு அடுத்தபடியாக சுனில் குமாா் நம்பிக்கை சோ்க்க, இதர பௌலா்கள் அவ்வப்போது விக்கெட்டுகள் சாய்க்கின்றனா். அடுத்தபடியாக பேட்டிங்கில், கேப்டன் பரஸ் டோக்ரா, ஷுபம் கஜுரியா ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்களாக உள்ளனா். மற்ற பேட்டா்கள் அவா்களுக்கு தோள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா்.