/

ஷிவம் துபே முதல் அரைசதம்: நெதர்லாந்துக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இந்திய அணி நெதர்லாந்துக்கு எதிராக பேட்டிங் விளையாடியது குறித்து...

News image
அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஷிவம் துபே. - படம்: ஏபி
Updated On :18 பிப்ரவரி 2026, 3:25 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 193/6 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய வீரர் ஷிவம் துபே 25 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்ய, அபிஷேக் டக் அவுட்டானார். இஷான் கிஷனும் ஆட்டமிழக்க சூர்யகுமார் மற்றும் துபே பொறுமையாக விளையாடினார்கள்.

இறுதியில் துபே, பாண்டியா அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மாற்றினார்கள்.

குறிப்பாக, மிகவும் அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

டி20 உலகக் கோப்பையில் ஷிவம் துபே தனது முதல் அரைசதத்தினை பவுண்டரி அடித்து நிறைவேற்றினார்.

நெதர்லாந்து அணியினர் ஃபீல்டிங்கில் சில கேட்ச்களை தவறவிட்டனர்.

அந்த அணியின் சார்பில் ஆர்யன் தத் 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

வான் பீக் 3 விக்கெட்டுகள் எடுத்தாலும் 56 ரன்களை விட்டுக்கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஹார்திக் பாண்டியா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று லாங்-ஆஃபில் ஆட்டமிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.