இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் தன்னுடைய 53 ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை (ஏப்.24) கொண்டாடினார். அதன்பிறகு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தும், அவர்களுக்கு தற்கையொப்பம் (ஆட்டோகிராஃப்) இட்டும் மகிழ்ந்தார்.
தனது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கேக் வெட்டினார். கேக் வெட்டிய பிறகு, பலத்த காவல்துறையினர் பாதுகாப்புக்கு மத்தியில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டதுடன், அவர்களுக்கு தற்கையொப்பம் (ஆட்டோகிராஃப்) இட்டார். மேலும், இந்தத் தருணத்தில் சச்சினுக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது இல்லத்தின்முன் திரண்டிருந்த ரசிகர்களின் உற்சாக வாழ்த்துகளை ஏற்றுக்கொண்ட சச்சின், "அனைத்து நல்வாழ்த்துகளுக்கும் நன்றி" எனத் தெரிவித்தார்.
1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி பிறந்த சச்சின், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகவும், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவராகவும் உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் அதிக சதங்கள் அடித்த சாதனையை அவர் தன்வசம் வைத்துள்ளார்.
மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் மட்டும் 100 சதங்களை விளாசியவர் என்ற தனிச்சிறப்பைக் கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய அடையாளமாகத் திகழ்ந்த சச்சின் தனது 79 ஆவது ஒருநாள் போட்டியில்தான் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது, இது ஒரு இமாலய சாதனையாக விளங்குகிறது.
அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் 34,357 ரன்களைக் குவித்து இந்திய அளவில் முதல் பேட்டராக இருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








