மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரிஷப் பந்த்தின் விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனை: பியூஸ் சாவ்லா

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த்தின் விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

News image

ஆட்டமிழந்து வெளியேறும் ரிஷப் பந்த் - படம் | AP

Updated On :2 ஏப்ரல் 2026, 12:04 pm

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த்தின் விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்ற போட்டிட்யில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த்தின் விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

பியூஸ் சாவ்லா

பியூஸ் சாவ்லா - படம் | AP

இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னைப் பொருத்தவரை ரிஷப் பந்த் பவர்பிளேவில் ரன் அவுட்டானதுதான் தில்லி கேபிடல்ஸுக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அவர்களது அணிகளுக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுப்பது மிகவும் முக்கியம். லக்னௌ அணியில் புதிதாக மிட்செல் மார்ஷுடன் தொடக்க ஆட்டக்காரராக ரிஷப் பந்த் களமிறங்கியது நன்றாக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 19 ரன்கள் சேர்த்தது.

மார்ஷ் அதிரடியாக விளையாடினார். ஆனால், ரிஷப் பந்த் ஆட்டமிழந்தவுடன் அடுத்து களமிறங்கிய வீரர்கள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பியது மிட்செல் மார்ஷ் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. ரிஷப் பந்த்தின் ரன் அவுட் ஆட்டத்தின் திருப்பு முனையாக மாறியது என்றார்.

142 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தில்லி கேபிடல்ஸ் அணி, சமீர் ரிஸ்வியின் பொறுப்பான ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ அணியை வீழ்த்தியது. சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian cricketer Piyush Chawla has stated that Rishabh Pant's wicket proved to be the turning point of the match against the Delhi Capitals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.