இந்தியா ஏ அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் ஏ!
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் ஆட்டத்தில் இந்தியா ஏ-வின் தோல்வி குறித்து...
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் ஆட்டத்தில் இந்தியா ஏ-வின் தோல்வி குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Dineshkumar
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அணி வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது.
கத்தாரில் நடைபெற்ற ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏ, இந்தியா ஏ அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 45 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஷாகித் அசிஸ் 3 விக்கெட்டுகள், மாஜ் சதாகட், ஷான் மசூத் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அணி 13.2 ஓவர்களில் 137/2 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக மாஜ் சதாகட் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அசத்தினார். பந்துவீச்சு, பேட்டிங் என அசத்திய இவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தா ஏ அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணியினர் டாஸ் சுண்டும்போது கைகுலுக்காமல் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
An inexplicable batting collapse saw fancied India A lose to Pakistan Shaheens by eight wickets in the Asia Cup Rising Stars tournament here on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது