டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தோல்வியின் வலி எங்களுக்குத் தெரியும், வெற்றியை எதிர்பார்க்கிறோம்: ஹர்மன்பிரீத் கௌர்

தோல்வியின் வலியை இந்திய அணி உணர்ந்துள்ளதாகவும், வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குவதாகவும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

News image
- படம் | பிசிசிஐ
Updated On :1 நவம்பர் 2025, 1:27 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தோல்வியின் வலியை இந்திய அணி உணர்ந்துள்ளதாகவும், வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குவதாகவும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நவி மும்பையில் நாளை (நவம்பர் 2) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியின் வலியை இந்திய அணி உணர்ந்துள்ளதாகவும், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கவுள்ளதாகவும் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தால் எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருக்கிறோம். ஆனால், வெற்றி பெற்றால் எப்படி உணர்வோம் என்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாளை எங்களுக்கு சிறப்பான நாளாக அமையும் என நம்புகிறோம். நாங்கள் நிறைய கடினமாக உழைத்துள்ளோம். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்றார்.

நடப்பு உலகக் கோப்பை தொடர் உள்பட இந்திய அணி இதுவரை மூன்று முறை உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்பாக நடைபெற்ற இரண்டு இறுதிப்போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன் பின், 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.

முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவோடு களமிறங்கும் இந்திய அணி, கோப்பையை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

summary

Indian team captain Harmanpreet Kaur has said that the Indian team has felt the pain of defeat and is looking forward to victory.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.