சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நாடுவிட்டு நாடு மாறி விளையாடுவது தொல்லையாக இருக்கிறது: நியூசி. பயிற்சியாளர்

துபை, பாகிஸ்தான் என மாறிமாறி விளையாடுவது தொல்லையாக இருப்பதாக நியூசி. பயிற்சியாளர் கூறியுள்ளார்.

News image
கேரி ஸ்டெட்- படம்: ஐசிசி
Updated On :7 மார்ச் 2025, 9:34 am

DIN

துபை, பாகிஸ்தான் என மாறிமாறி விளையாடுவது தொல்லையாக இருப்பதாக நியூசி. தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார். மேலும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பாரெனவும் கூறியுள்ளார்.

இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.9) சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபையில் விளையாடுவதால் கூடுதல் ஆதாயாம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நியூசி. பயிற்சியாளர் கூறியதாவது:

வருண் சக்கரவர்த்தி அச்சுறுத்தல்

வருண் சக்கரவர்த்தி தரமான பந்துவீச்சாளர். எங்களுக்கு எதிராக அவர் கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடினார். இறுதிப் போட்டியில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். அதனால், அவருக்கு எதிராக எப்படி ரன்களை குவிப்பது என எங்களது குழுவினர் தீவிரமாக சிந்தித்து வருகிறார்கள்.

சிலநாள்களுக்கு முன்பாக இந்தியாவுடன் விளையாடிய போட்டியில் இருந்து நாங்கள் சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

துபையில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமென நாங்கள் நினைக்கவில்லை. ஏனெனில் இங்கு விளையாடுவது என்பது எங்களது கைகளில் இல்லை. அது ஐசிசியின் முடிவு. அதனால், அதுகுறித்து அதிகமாக கவலைப்பட தேவையில்லை.

நாங்கள் ஒருபோட்டி துபையில் விளையாடியுள்ளதால் அதிலிருந்து அனுபவங்களை விரைவாக கற்றுக்கொண்டு இருக்கிறோம்.

மாறிமாறி விளையாடுவது தொல்லையாக இருக்கிறது

8 அணியிலிருந்து 2 அணியாக வந்துள்ளோம். எங்களது இடத்திலிருந்து பார்த்தால் இது ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது. மீதமிருப்பது ஒரு போட்டிதான். ஞாயிறு இந்தியாவை வீழ்த்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

பாகிஸ்தான், துபை என மாறிமாறி சுற்றுவது பரப்பான வேலையில் சற்று தொல்லையாக இருக்கிறது. ஆனாலும் இதை சமாளிக்கும் வகையில் நியூசிலாந்து அணி தயாராக இருக்கிறது.

லாகூரிலிருந்து துபைக்கு வருவதற்கே ஒருநாள் சரியாக போய்விட்டது. ஆனால், சில நாள்கள் மீதமுள்ளன. அதில் ஓய்வெடுக்கவும் பயிற்சி செய்யவும் சரியாக இருக்கும்.

அதிகமாக பயிற்சி செய்வதைவிட மனதுக்கும் உடலுக்கும் உள்ள இணைப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.