தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா செய்ய வேண்டியதென்ன? முன்னாள் கேப்டன் பதில்!

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன்கள் குவிப்பதை இலக்காக கொண்டு விளையாட வேண்டும்.

News image
ரோஹித் சர்மா- படம் | AP
Updated On :7 மார்ச் 2025, 10:20 am

DIN

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன்கள் குவிப்பதை இலக்காக கொண்டு விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் நாளை மறுநாள் (மார்ச் 9) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்ல இரண்டு அணிகளும் கடுமையான போட்டியாளர்களாக உள்ளனர்.

25-30 ரன்களில் திருப்தி கூடாது

நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 25-30 ரன்கள் எடுத்து அணிக்கு தொடக்கம் அமைத்துக் கொடுத்தால் போதும் என ரோஹித் சர்மா நினைக்கக் கூடாது. பெரிய இன்னிங்ஸ் விளையாடி அதிக அளவில் ரன்கள் குவிப்பதை அவர் இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் (கோப்புப் படம்)

சுனில் கவாஸ்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 25 ஓவர்கள் வரை பேட்டிங் செய்தால், அணியின் ஸ்கோர் 180-200 ரன்களாக இருக்கும். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். அவ்வாறு செய்தால், இந்திய அணியால் 350 அல்லது அதற்கும் மேற்பட்ட ரன்களை குவிக்க முடியும். ரோஹித் சர்மா அவரது விக்கெட்டினை இழக்காமல் பெரிய இன்னிங்ஸ் விளையாடினால், அவரால் எதிரணியிடமிருந்து ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக மாற்ற முடியும்.

ஒரு பேட்ஸ்மேனாக 25-30 ரன்கள் எடுத்துவிட்டு திருப்தியடைய முடியுமா? 25-30 ரன்கள் எடுத்துவிட்டு உங்களது மனம் திருப்தியடையக் கூடாது. நீங்கள் 8 அல்லது 9 ஓவர்களில் ஆட்டமிழக்காமல், 25 ஓவர்கள் மற்றும் அதற்கும் மேலான ஓவர்கள் வரை நிலைத்து நின்று விளையாடினால், உங்களால் போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக அதிரடியான தொடக்கத்தை கொடுக்கிறார். ஆனால், அதிரடியாக விளையாடும்போது அடிக்கடி குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறுகிறார். இந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் 41 ரன்கள் எடுத்ததே, இந்த தொடரில் அவரது அதிகபட்ச ரன்கள் ஆகும்.

பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக ரோஹித் சர்மா 20, 15, 18 ரன்கள் முறையே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.