இந்திய அணி அளவுக்கு அதிகமாக ஜஸ்பிரித் பும்ராவை நம்பியிருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாவது போட்டி வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பும்ராவை நம்பியிருக்கும் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா நன்றாக பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போதிலும், இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் அவருக்கு உறுதுணையாக தேவையான நேரத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றத் தவறினர். இதனால், பும்ராவின் மீதான பந்துவீச்சு பணிச்சுமை அதிகமானது.
இந்த நிலையில், இந்திய அணி அளவுக்கு அதிகமாக ஜஸ்பிரித் பும்ராவை நம்பியிருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி அளவுக்கு அதிகமாக பும்ராவையே நம்பியிருக்கிறது. அவர் ஒருவர் மட்டுமே விக்கெட்டுகளை கைப்பற்றுவது எளிதான விஷயம் கிடையாது. அணியில் அதிக அளவிலான அனுபவம் வாய்ந்த வீரர்கள் வேண்டும். இந்திய அணி குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். பேட்டிங்கில் சொதப்பியதால் முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்தோம்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சரியான வீரர்களை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். மேலும், அணியின் பந்துவீச்சு மிகச் சரியாக இருக்க வேண்டும். ஷுப்மன் கில் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஒரு போட்டியிலேயே அவரது கேப்டன் பொறுப்பு குறித்து மதிப்பிடுவது கடினம். அவருக்கு நாம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றார்.
Summary
Former captain Mohammad Azharuddin said India should play left-arm wrist spinner Kuldeep Yadav in the Edgbaston Test against England to add more experience to their bowling attack and reduce the burden on pace talisman Jasprit Bumrah.
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த தென்னாப்பிரிக்க வீரர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

சிஎஸ்கேவுக்கு கவலையளிக்கும் விஷயம் இது மட்டும்தான்; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: தயாராகிறது இந்திய அணி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


