இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய வங்கதேசம் அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 458 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், வங்கதேசத்தைக் காட்டிலும் இலங்கை அணி 211 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் 133 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
புலம்பும் வங்கதேச கேப்டன்
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி மிகவும் ஏமாற்றமளிப்பதாக வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியை நாங்கள் முடித்துள்ள விதம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை. நன்றாக விளையாடாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. முதல் இன்னிங்ஸில் நாங்கள் சரியாக விளையாடாதது எங்களது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
முதலில் பேட்டிங் செய்தது சரியான முடிவு என்பதை இப்போதும் என்னால் உணர முடிகிறது. ஆனால், நாங்கள் சரியாக விளையாடவில்லை. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கின்போது, நிறைய தவறுகளை செய்துவிட்டோம். மூன்றாம் நாளில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்றார்.
இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
summary
Bangladesh captain Nazmul Hossain Shanto has expressed his disappointment over the defeat in the second Test against Sri Lanka.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!

சிஎஸ்கேவுக்கு கவலையளிக்கும் விஷயம் இது மட்டும்தான்; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

சேப்பாக்கத்தில் 200 ரன்கள் உறுதி! அஸ்வின் பகிர்ந்த பதிவு!

பாகிஸ்தான் கேப்டன் ரன்அவுட்.. சர்ச்சையில் சிக்கிய வங்கதேச கேப்டன்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


