19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 27) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 42.2 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ராக்கி ஃபிலிண்டாஃப் 56 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஐசக் முகமது 42 ரன்களும், பென் டாக்கின்ஸ் 18 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் கனிஷ்க் சௌகான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹெனில் படேல், அம்பிரிஷ் மற்றும் முகமது தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
சூர்யவன்ஷி அதிரடி; இந்தியா அபார வெற்றி
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 24 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அபிக்யான் குண்டு 45 ரன்களும், கேப்டன் ஆயுஷ் மாத்ரே 21 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஏஎம் பிரெஞ்ச் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜாக் ஹோம் மற்றும் ரால்பி ஆல்பர்ட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் முலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
summary
The Indian team achieved a resounding victory by defeating England in the first match of the Under-19 ODI series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் ஒருநாள்: மே.இ.தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

முதல் டி20 போட்டி: நியூசி.யை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

மகளிா் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி! 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது

டெஸ்ட் போட்டி: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


