பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

முதல் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

கே எல் ராகுல், ரிஷப் பந்த் சதம் வீண்... விக்கெட் வீழ்த்த முடியாமல் இந்தியா திணறல்...

News image

இந்தியா தோல்வி - படம்|இந்திய கிரிக்கெட் அணி பதிவு

Updated On :24 ஜூன் 2025, 5:31 pm

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் இன்று(ஜூன் 24) காலை தொடங்கியது. ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவதற்குள் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 373 ரன்களை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு எடுத்ததால் வெற்றியை தங்கள் பக்கம் வசப்படுத்தியது.

முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த் சதம் உதவியுடன் 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார். அவரைத் தொடர்ந்து, ரிஷப் பந்த்தும் சதமடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம், இந்தியா மொத்தம் 370 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங் செய்து நேற்றைய நான்காம் நாள் ஆட்டம் முடிவில் 21 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்தது.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், முதல் விக்கெட்டுக்கே இங்கிலாந்து 188 ரன்கள் சேர்த்து இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார்.

தொடக்கவீரர் ஸாக் க்ராலி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் விழுந்தன. எனினும், ஜோ ரூட் நிலைத்து நின்று அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு நங்கூரமிட்டார். இறுதியில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 373 ரன்களை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.