ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் தவறு செய்துவிட்டாரா ஷுப்மன் கில்?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது குறித்து...

News image

குல்தீப் யாதவ் (கோப்புப் படம்)

Updated On :24 ஜூன் 2025, 1:05 pm

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெற்றிருந்தால், அது இந்திய அணிக்கு சாதகமாக இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்க, இங்கிலாந்தின் வெற்றிக்கு 254 ரன்கள் தேவைப்படுகின்றன. இந்திய அணியின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.

தவறு செய்துவிட்டாரா ஷுப்மன் கில்?

இந்திய அணியின் நட்சத்திர சூழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது சரியான முடிவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். ஆனால், மற்ற பந்துவீச்சாளர்கள் சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவறியதால், பும்ராவின் பந்துவீச்சையே இந்திய அணி நம்பியிருக்க வேண்டியிருந்தது. மற்ற வீரர்கள் சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தத் தவறியதால், இந்திய அணியால் முதல் இன்னிங்ஸில் வெறும் 6 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற முடிந்தது.

பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட லீட்ஸ் ஆடுகளம், முழுவதுமாக பேட்டிங்குக்கு சாதகமாக மாறியது. இருப்பினும், 4-வது இன்னிங்ஸில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இல்லாதது பெரிதாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிராக குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டுள்ளது அவர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் எனக் கூறப்படுவதற்கான மற்றொரு காரணம். இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ், 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு ஐந்து விக்கெட்டும் அடங்கும்.

371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. குல்தீப் யாதவ் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்தால், இங்கிலாந்து வீரர்களுக்கு அவர் அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பார் எனக் கூறப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்தீர ஜடேஜா என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.