மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பிளேயிங் லெவனில் இடம் பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை: ஆலி போப்

பிளேயிங் லெவனில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இங்கிலாந்து வீரர் ஆலி போப் தெரிவித்துள்ளார்.

News image

முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆலி போப் - படம் | AP

Updated On :23 ஜூன் 2025, 12:09 pm

பிளேயிங் லெவனில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இங்கிலாந்து வீரர் ஆலி போப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஆலி போப் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார். அந்த தொடரின் முதல் போட்டியில் 196 ரன்கள் எடுத்து அபாரமாகத் தொடங்கிய ஆலி போப், அடுத்த நான்கு போட்டிகளில் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த தொடருக்குப் பிறகு ஆலி போப் விளையாடும் விதம் மிகப் பெரிய பேசுபொருளானது. அவர் சரியாக விளையாடுவதில்லை என்பதால், பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியில் அவர் இடம்பெற்றார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற துணைக் கேப்டன் ஆலி போப், சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். அவர் 106 ரன்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதிகம் யோசிக்கவில்லை

முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய நிலையில், பிளேயிங் லெவனில் இடம்பெறுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை என ஆலி போப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிளேயிங் லெவனில் இடம்பெறுவது தொடர்பான ஆலோசனைகள் என்னை பாதிக்காத வகையில் பார்த்துக் கொண்டேன். என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்தி நன்றாக விளையாட வேண்டும் என்பதை மட்டும் உறுதிப்படுத்திக் கொண்டேன். முதல் 30 ரன்கள் எடுக்கும் வரை நிதானமாக விளையாடினேன். அதன் பின், நம்பிக்கையுடன் ஷாட்டுகளை விளையாடினேன்.

வெளியில் என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து கவலைப்படாமல் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தேன். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசியது மகிழ்ச்சியளிக்கிறது. இது நீண்ட தொடர். தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.