இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது குறித்து அந்த அணியின் பந்துவீச்சு ஆலோசகர் டிம் சௌதி பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூன் 20) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஷுப்மன் கில்லும் சதம் விளாசி அசத்தினார். துணைக் கேப்டன் ரிஷப் பந்த் அரைசதம் கடந்தார்.
பென் ஸ்டோக்ஸின் முடிவு சரியா?
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ததை ஆதரித்து அந்த அணியின் பந்துவீச்சு ஆலோசகர் டிம் சௌதி பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேற்று ஆடுகளத்தில் சிறிதளவு மட்டுமே ஈரப்பதம் இருந்தது. இன்றும் ஆடுகளத்தில் சிறிதளவு மட்டுமே ஈரப்பதம் இருப்பதாகத் தெரிகிறது. அதன் காரணமாகவே இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக முடிவெடுத்தது. ஆடுகளத்தின் தன்மையைப் பார்த்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது. எல்லா நேரங்களிலும் நமது முடிவுகள் சரியாக இருக்க முடியாது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரம் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். கே.எல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவருமே சிறப்பாக விளையாடினார்கள். கேப்டன் ஷுப்மன் கில் நன்றாக விளையாடினார். இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் பலரும் இங்கிலாந்தில் இதற்கு முன்பாக விளையாடியதில்லை. இருப்பினும், அவர்கள் மிகவும் திறமைசாலிகள் என்பதை உறுதியாகக் கூற முடியும்.
இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகிறார். அவர் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார். இங்கிலாந்து அணியின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்பாக இதுபோன்ற சூழல்களில் இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆட்டத்தில் ஒருநாள் மட்டுமே முடிந்திருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்றார்.
முன்னதாக, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சு முடிவை அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

சிஎஸ்கேவுக்கு கவலையளிக்கும் விஷயம் இது மட்டும்தான்; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

எனது கேப்டன்சி பயணத்தில் கடைசி 3 மாதங்கள் மிகவும் கடினமானவை: பென் ஸ்டோக்ஸ்

பிசிசிஐ சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு ஷுப்மன் கில் தேர்வு!
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


