தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைக்கவிருக்கும் இந்திய மகளிரணி கேப்டன்!

இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் குறித்து...

News image

இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் - படம்: ஏபி

Updated On :2 ஜூலை 2025, 12:33 pm

இந்திய மகளிரணி டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் டி20 போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தவிருக்கிறார்.

இந்திய மகளிரணி இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலிரண்டு போட்டிகளில் இந்திய மகளிரணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.

அடுத்த போட்டிகள் முறையே ஜூலை 4,9,12ஆம் தேதிகள் நடைபெறவிருக்கின்றன.

இந்தத் தொடரில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வென்றால் உலக அளவில் டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற மகளிரணி கேப்டன் என்ற சாதனை ஹர்மன்ப்ரீத் கௌர் வசம் சென்றடையும்.

தற்போதைக்கு ஆஸி. கேப்டன் மெக் லானிங் முதலிடத்தில் இருக்க ஹர்மன்ப்ரீத் கௌர் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மெக் லானிங் ஓய்வு பெற்றதால் இந்திய அணி கேப்டனுக்கு புதிய சாதனை படைக்க வாய்ப்பிருக்கிறது.

அதிக டி20 போட்டிகளில் வென்ற மகளிரணி கேப்டன்கள்

1. மெக் லானிங் - 76 வெற்றிகள் (ஆஸி. - 100 போட்டிகளில்)

2. ஹர்மன்ப்ரீத் கௌர் - 73 வெற்றிகள் (இந்தியா - 124 போட்டிகளில்)

3. ஹீத்தர் நைட் - 72 வெற்றிகள் (இங்கிலாந்து - 96 போட்டிகளில்)

Summary

Indian women's T20 team captain Harmanpreet Kaur is set to set a new record in T20Is.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.