தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பும்ரா இல்லாதது இந்தியாவின் பிரச்னை; இங்கிலாந்தின் பிரச்னையல்ல: பென் ஸ்டோக்ஸ்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.

News image

பென் ஸ்டோக்ஸ் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :1 ஜூலை 2025, 12:23 pm

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணியும், வெற்றியைத் தொடரும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் உள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.

பென் ஸ்டோக்ஸ் கூறுவதென்ன?

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில், டெஸ்ட் தொடர் முழுவதும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என்பது இந்திய அணியின் பிரச்னை என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என்பது இந்திய அணியின் பிரச்னை. அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நான் இங்கிலாந்து அணியின் கேப்டன். இந்திய அணி மிகவும் சிறந்த அணி. அவர்கள் எப்போதும் சவாலளிக்கும் விதமாக விளையாடுவார்கள். அவர்களை எளிதாக வீழ்த்திவிடலாம் என நினைக்கவில்லை.

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ரிஷப் பந்த் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் திறமை வாய்ந்த வீரர். அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை கடந்த வாரம் பார்த்திருப்போம். முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசி அசத்தினார். அவர் மிகவும் அபாயகரமான வீரர் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே, ஜஸ்பிரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

England captain Ben Stokes on Tuesday dismissed the chatter surrounding Jasprit Bumrah's availability for only three Tests out of five as India's problem.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.