இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) முதல் தொடங்குகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணி இன்னும் அதன் பிளேயிங் லெவனை அறிவிக்கவில்லை. முதல் டெஸ்ட்டில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
இரண்டாவது டெஸ்ட் குறித்து ஷுப்மன் கில்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.
2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு ஷுப்மன் கில் பேசியதாவது: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படுவதற்கான தெரிவில் ஜஸ்பிரித் பும்ரா கண்டிப்பாக இருக்கிறார். 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் விதமான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்ய வேண்டும். அதிக ரன்கள் குவிக்கவும் வேண்டும்.
நாளை (ஜூலை 2) எந்த மாதிரியான அணியுடன் களமிறங்கவுள்ளோம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆடுகளத்தின் தன்மையைப் பொருத்தே பிளேயிங் லெவனை தேர்வு செய்வோம். கூடுதல் பேட்டருடன் களமிறங்குவதைக் காட்டிலும், 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றும் விதமான பிளேயிங் லெவனுடன் களமிறங்க வேண்டும் என்றார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
The Indian team is yet to announce its playing eleven for the second Test against England.
இதையும் படிக்க: சிஎஸ்கேவுக்கு விற்கப்படுகிறாரா சஞ்சு சாம்சன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!
தொடரும் சாதனைப் பயணம்!

ரன்கள் குவிப்பதில் தடுமாற்றம்; இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா?

பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து.. 2-வது முறை சாம்பியன்! 2022 ரீவைண்ட்!!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


