தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சாம்பியன்ஸ் டிராபிக்கான டிக்கெட் விற்பனையை தொடங்கும் ஐசிசி!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி தொடங்கவுள்ளது.

News image
- படம் | ஐசிசி
Updated On :27 ஜனவரி 2025, 2:16 pm

DIN

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி நாளை (ஜனவரி 28) தொடங்கவுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படுகின்றன. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன.

டிக்கெட் விற்பனை தொடக்கம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி நாளை (ஜனவரி 28) முதல் தொடங்கவுள்ளது.

போட்டிக்கான சாதாரண டிக்கெட்டின் குறைந்தபட்ச விலையை ரூ. 310 ஆக ஐசிசி தோராயமாக அறிவித்துள்ளது. பிரீமியம் டிக்கெட்டுக்கான குறைந்தபட்ச விலை தோராயமாக ரூ.465 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை, முதல் அரையிறுதிப் போட்டி நிறைவடைந்தவுடன் தொடங்கும் எனவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடர்பாக ஐசிசி தெரிவித்ததாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கவுள்ளதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஐசிசி தொடரை நடத்தவுள்ள பாகிஸ்தானுக்கு இது மிகவும் முக்கியமான தருணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் முதலில் ஐசிசியின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம்.

சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் மைதானங்களை சீரமைக்கும் பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் முழுமையாக முடிக்காத நிலையில், சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.