தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ரஞ்சி கோப்பையில் விராட் கோலி விளையாடுகிறாரா?

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுகிறாரா என்பது தொடர்பாக...

News image
விராட் கோலி (கோப்புப் படம்)
Updated On :17 ஜனவரி 2025, 12:10 pm

DIN

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி ரஞ்சி கோப்பையில் தில்லி அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக செயல்படத் தவறினர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை கடுமையாக விமர்சித்தனர். ஃபார்மில் இல்லாத வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறாரா?

ரஞ்சி கோப்பையில் சௌராஷ்டிரத்துக்கு எதிரான போட்டியில் தில்லி அணி விளையாடவுள்ளது. இந்தப் போட்டிக்கான 22 பேர் கொண்ட உத்தேச அணியை தில்லி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் நட்சத்திர வீரரான விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலம், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், ரஞ்சி கோப்பையில் விராட் கோலி விளையாடுகிறாரா? இல்லையா? என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின்போது, விராட் கோலிக்கு கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டதாகவும், அதற்கான சிகிச்சையில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரஞ்சி கோப்பையில் விளையாடுவது சந்தேகம் என விராட் கோலி தரப்பிலிருந்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

விராட் கோலி கடைசியாக கடந்த 2012 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.