சாம்பியன்ஸ் டிராபி: முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு!
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.


சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
கராச்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாத நிலையில், அதன் ஆட்டங்கள் துபையில் நடைபெறவுள்ளன.
நியூசிலாந்து அணி 3 ஓவர்கள் முடிவில் 17/0 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து (பிளேயிங் லெவன்): டெவோன் கான்வே, வில் யங், கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, வில்லியம் ஓர்ர்கே
பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்): ஃபகார் ஜமான், பாபர் அசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான்(கீப்பர், கேப்டன்), சல்மான் ஆகா, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...