2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

30 பந்துகளில் 30 ரன்கள் தேவை; உலகக் கோப்பை வெற்றி குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின் கடைசி சில ஓவர்களில் தான் எவ்வாறு உணர்ந்ததாக கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்துள்ளார்.

News image
ரோஹித் சர்மா
Updated On :16 ஜூலை 2024, 4:05 pm

DIN

டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின் கடைசி சில ஓவர்களில் தான் எவ்வாறு உணர்ந்ததாக கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்துள்ளார்.

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட, போட்டி அந்த அணிக்கு சாதகமாக இருந்தது. இருப்பினும், இந்திய அணி அபார பந்துவீச்சால் வெற்றியை வசமாக்கியது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின் கடைசி சில ஓவர்களில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்ததாக ரோஹித் சர்மா மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியின் கடைசி சில ஓவர்களில் என்ன செய்தவென்று தெரியாமல் வெறுமையாக இருந்தேன். ஆனால், எதைப் பற்றியும் அதிகமாக யோசிக்கவில்லை. அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், கவனமாக செயல்பட்டு உலகக் கோப்பையை வெல்ல வேண்டிய கடமை இருந்தது. எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் அமைதியாக இருப்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது.

தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அந்த தருணத்தில் நாங்கள் வீசிய 5 ஓவர்கள், நாங்கள் எந்த அளவுக்கு அமைதியாக இருந்து உலகக் கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்தினோம் என்பதைக் காட்டியிருக்கும். கோப்பையை வெல்ல வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் நினைக்கவில்லை. நாங்கள் போட்டியின் முடிவு குறித்து அச்சமடையவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.