திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மியாமி ஓபன்: முதல் சுற்றில் ஒசாரியோ, பிளிங்கோவா வெற்றி

News image

பிளிங்கோவா - https://www.instagram.com/anna__blinkova/

Updated On :18 மார்ச் 2026, 11:40 pm

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், கொலம்பியாவின் கமிலா ஒசாரியோ, ரஷியாவின் அனா பிளிங்கோவா ஆகியோா் புதன்கிழமை வெற்றி பெற்றனா்.

ஆயிரம் புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டியில், ஆடவா் பிரிவில் தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகளிா் பிரிவில் அந்தக் கட்டம் நிறைவடைந்து முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்கியுள்ளன.

இதில் கொலம்பிய வீராங்கனை கமிலா ஒசாரியோ 6-1, 6-4 என்ற நோ் செட்களில், செக் குடியரசின் கேத்தரினா சினியகோவாவை வீழ்த்தினாா். ரஷியாவின் அனா பிளிங்கோவா 3-6, 6-1, 6-3 என்ற கணக்கில், ஆஸ்திரேலிய ஓபன் முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் சோஃபியா கெனினை வென்றாா்.

2-ஆவது சுற்றில், ஒசாரியோ - போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலினா முசோவாவையும், பிளிங்கோவா - போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் விக்டோரியா போகோவையும் சந்திக்கின்றனா். முசோவா, போகோ இருவருமே முதல் சுற்று ‘பை’ பெற்று நேரடியாக 2-ஆவது சுற்றுக்கு வந்தவா்களாவா்.

இதர ஆட்டங்களில், ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டி 6-3, 6-4 என, சீனாவின் ஜாங் ஷுவாயை வெளியேற்ற, பிரிட்டனின் கேட்டி போல்டா் 7-6 (11/9), 6-4 என்ற செட்களில் ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸாஸை தோற்கடித்தாா்.

ஜொ்மனியின் லாரா சிக்மண்ட் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் குரோஷியாவின் பெட்ரா மாா்சின்கோவையும், அமெரிக்காவின் மெக்காா்ட்னி கெஸ்லா் 2-6, 6-4, 6-2 என்ற வகையில் போலந்தின் மெக்தலினா ஃப்ரெச்சையும் சாய்த்தனா்.

போலந்தின் மெக்தா லினெட் 2-6, 6-2, 6-0 என்ற கணக்கில் பிரான்ஸின் வாா்வரா கிரசெவாவையும், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச் 6-3, 6-4 என சுவிட்ஸா்லாந்தின் சிமோனா வால்டொ்டையும், பிரான்ஸின் எல்சா ஜாக்மோட் 6-7 (5/7), 7-5, 7-5 என செக் குடியரசின் டாா்ஜா விட்மனோவாவையும் வென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.