லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சென்னையை வென்றது மோகன் பகான்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:43 pm

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் 2-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை வென்றது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மோகன் பகானுக்காக ஜேமி மெக்லாரென் (45+4’) கோல் கணக்கைத் தொடங்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது.

சென்னையின் கோல் முயற்சிகள் தகுந்த பலன் அளிக்காத நிலையில், மோகன் பகானுக்காக டிமிட்ரி பெட்ரேடோஸ் 65-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

எஞ்சிய நேரத்தில் சென்னைக்கு கோல் வாய்ப்புகள் கை கூடாமல் போக, இறுதியில் மோகன் பகான் 2-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுமே இதுவரை தலா 2 ஆட்டங்களில் விளையாடியிருக்க, மோகன் பகான் 2-ஆவது வெற்றியுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. சென்னை 2 தோல்விகளுடன் 11-ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது.