சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் ரவி சாஸ்திரி!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்காக அவர் மீண்டும் விண்ணப்பிக்கிறார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:24 pm

PTI

புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்காக அவர் மீண்டும் விண்ணப்பிக்கிறார்.

இதேபோல் உதவிப் பயிற்சியாளர்களாக இருந்த சஞ்சய் பாங்கர் (பேட்டிங்), பாரத் அருண் (பவுலிங்), ஸ்ரீதர் (பீல்டிங்)ஆகியோரும் தங்களின் பழைய பதவிகளுக்கு விண்ணப்பிக்கவுள்ளனர்.

பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரம் இன்னும் இரு தினங்களில் வெளியாகவுள்ளது. அது வெளியானதும் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் விண்ணப்பம் செய்யவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சரின் பதவிக்காலம் கடந்த 2015 உலகக் கோப்பை போட்டியோடு முடிவுக்கு வந்தது.

இதன்பிறகு பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ரவி சாஸ்திரி இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவருடைய உதவி பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், பாரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்களுடைய பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை போட்டியோடு முடிவுக்கு வந்தது.

இதையடுத்து புதிய பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது. இந்த நிலையில் ரவி சாஸ்திரி தலைமையிலான கூட்டணி மீண்டும் பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ரவி சாஸ்திரி மற்றும் உதவிப் பயிற்சியாளர்களின் செயல்பாடு பிசிசிஐக்கு திருப்தியளிப்பதாக அமைந்தது. எனினும் மறுபடியும் அதே பதவிக்கு வரவேண்டும் என்றால் அதற்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரம் விரைவில் வெளியிடப்பவுள்ளது. அதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்' என்றார்.

பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், "பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்ட அனுராக் தாக்குரை ரவி சாஸ்திரி மற்றும் உதவிப் பயிற்சியாளர்கள் தில்லியில் சந்தித்துப் பேசியுள்ளனர். அந்த சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது. அப்போது கடந்த 18 மாதங்களில் ரவி சாஸ்திரி மற்றும் உதவிப் பயிற்சியாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக அனுராக் தாக்குர் பாராட்டியுள்ளார்.

அதேநேரத்தில் தகுதியுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே பிசிசிஐ அறிவித்துவிட்டது. அதனால் மற்ற விண்ணப்பதாரர்களைப் போலவே ரவி சாஸ்திரி கூட்டணியும் முறையாக விண்ணப்பிப்பதுதான் நியாயமாக இருக்கும்.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் "லெவல் 3' பயிற்சியாளர் படிப்பை முடித்திருப்பதோடு, சீனியர் அணிகளுக்கு பயிற்சியளித்தவராக இருக்க வேண்டும். இல்லையெனில் தனது நாட்டுக்காக 50 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும் என்பதுதான் தற்போது கடைப்பிடிக்கப்படும் விதிமுறை. பயிற்சியாளர் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறினால், 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரவி சாஸ்திரியின் பெயரை பரிசீலிக்க முடியாது' என தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.