மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பிரசவ வார்டில் மனைவி: குழந்தைக்காக சுரேஷ் ரெய்னா வெயிட்டிங்! (படங்கள்)

இந்தத் தருணத்தை புகைபடங்களாகப் பதிவு செய்துள்ள ரெய்னா அவற்றைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Updated On :13 மே 2016, 12:14 pm

இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியான பிரியங்கா செளத்ரியை கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார். இந்நிலையில் ரெய்னாவின் மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது.

இதற்காக, கொல்கத்தாவுடனான ஐபிஎல் ஆட்டத்துக்குப் பிறகு, மனைவியை அருகில் இருந்து கவனித்துக்கொள்வதற்காக நெதர்லாந்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் ரெய்னா. ரெய்னாவின் மனைவி பிரியங்கா நெதர்லாந்தில் பணிபுரிந்து வருகிறார்.

பிரசவத்துக்காக மனைவி மருத்துவமனையில் உள்ள இந்தத் தருணங்களைப் புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ள ரெய்னா அவற்றைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெயிட்டிங் வெயிட்டிங் என்று படங்களை வெளியிட்டு எழுதியுள்ளார்.

நாளை பெங்களூரில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்தில் ரெய்னா கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருடைய நீண்டநாள் சாதனை ஒன்று முறியவுள்ளது.

2008 முதல் ஐபிஎல்-லில் ஆடிவரும் ரெய்னா இதுவரை ஒரு ஐபிஎல் போட்டியைக் கூட தவறவிட்டதில்லை. தற்போது மனைவியின் பிரசவத்துக்காக அவர் நெதர்லாந்து சென்றுள்ளதால் நாளைய போட்டியில் பங்கேற்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல்-லில் தொடர்ந்து ஆடுகிற வீரர் என்கிற பெருமையை ரெய்னா இழக்கவுள்ளார்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.