அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

ரியோ ஒலிம்பிக்: பாட்மிண்டன் பிரிவில் 7 இந்தியர்கள் தகுதி

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியாவைச் சேர்ந்த 7 பாட்மிண்டன் வீரர், வீராங்கணைகள் தகுதி பெற்றுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:10 pm

PTI

புது தில்லி: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியாவைச் சேர்ந்த 7 பாட்மிண்டன் வீரர், வீராங்கணைகள் தகுதி பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

மே மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்படும் சர்வதேச பாட்மிண்டன் சம்மேளனத்தின் தர வரிசையில் முதல் 34 இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கணைகள் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

இதன்படி பெண்கள் பிரிவில் 7-வது இடம் பிடித்துள்ள சாய்னா நெவால், தகுதிப் பெற்றுள்ளார். கடந்த முறை லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நெவால் வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதுபோல தரவரிசையில் 9-வது இடம் பிடித்துள்ள பி.வி.சிந்துவும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்குக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஆண்கள் பிரிவில் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜுவலா கட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஆகியோரும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி மற்றும் பி.சுமீத் ரெட்டி ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.

லண்டனில் கடந்த முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 5 இந்திய பாட்மிண்டன் வீரர்கள் பங்கேற்ற நிலையில், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு 7 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

தகுதிபெற்றுள்ள வீரர் வீராங்கணைகளுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.