சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

இந்தி பேச தெரிந்த பயிற்சியாளர் தேவை: பிசிசிஐ விளம்பரம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு இந்தி உள்ளிட்ட மாநில மொழிகள் பேச தெரிந்திருக்க வேண்டும் என பிசிசிஐ விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:24 pm

PTI

புது தில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு இந்தி உள்ளிட்ட மாநில மொழிகள் பேச தெரிந்திருக்க வேண்டும் என பிசிசிஐ விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சரின் பதவிக்காலம் 2015 உலகக் கோப்பை போட்டியோடு முடிவுக்கு வந்தது. இதன்பிறகு பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ரவி சாஸ்திரி இயக்குநராக செயல்பட்டு வந்தார். சஞ்சய் பாங்கர், பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் உதவி பயிற்சியாளர்களாக செயல்பட்டு வந்தனர். இவர்களுடைய பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை போட்டியோடு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் புதிய பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரங்கள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தலைமைப் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவருக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாட தெரிந்திருக்க வேண்டும். மேலும், இந்தி மற்றும் மாநில மொழிகளும் பேசத் தெரிந்துக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர விளையாட்டு உளவியல், விளையாட்டு மருத்துவம் குறித்தும் தெரிந்திருப்பதோடு, ஒவ்வொரு வீரரின் திறமைகள் குறித்து தொழில்நுட்ப ரீதியாக விளக்கம் அளிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செலுத்துவதற்கு ஜூன் 10 ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.