/

இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: பஞ்சாப் ஆல்ரவுண்டர் குர்கீரத் சிங் அணியில் சேர்ப்பு

பெங்களூரூவில் சனிக்கிழமை தொடங்கவிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில், பஞ்சாபின் ஆல்ரவுண்டர் குர்கீரத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:31 am

ANI

பெங்களூரூவில் சனிக்கிழமை தொடங்கவிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில், பஞ்சாபின் ஆல்ரவுண்டர் குர்கீரத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் குர்கீரத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரூவில் சனிக்கிழமை தொடங்கும் போட்டிக்கு முன்னதாக அவர் அணியினருடன் இணைந்து கொள்வார்.

பஞ்சாபை சேர்ந்த 25-வயது ஆல்ரவுண்டரான குர்கீரத் சிங், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், அவருக்கு விளையாடும் 11 பேர் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரூ சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.