திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ஒருநாள் போட்டி: தோனி, முஸ்தாபிசருக்கு கடுமையான அபராதம்!

அப்போது தோனி வரும் பாதையில் முஸ்தாபிசர் குறுக்கே வந்ததால் அவரை தனது முழங்கை மற்றும் தோள்பட்டையால் இடித்தார்...

News image
Updated On :19 ஜூன் 2015, 12:23 pm

இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் ஒரு நாள் ஆட்டம் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நேற்று நடந்தது. இதில் வங்கதேசம் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி ஆடும்போது முஸ்தாபிசர் வீசிய 25-வது ஓவரில், மிட் ஆஃப்புக்குப் பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் எடுக்க ஓட ஆரம்பித்தார் தோனி. அப்போது தோனி வரும் பாதையில் முஸ்தாபிசர் குறுக்கே வந்ததால் அவரை தனது முழங்கை மற்றும் தோள்பட்டையால் இடித்தார் தோனி. இதில் முதலில் தடுமாறிய முஸ்தாபிசர், பிறகு காயம் ஏற்பட்டதை அறிந்து, ஓய்வு அறைக்குத் திரும்பினார். 

நான் விலகி ஓடுவேன் என்று அவர் நினைத்தார். அவர் விலகிவிடுவார் என்று நான் நினைத்தேன். ஆனால் இரண்டு பேருமே விலகவில்லை மோதல் நடந்து விட்டது என்று போட்டி முடிந்தபிறகு பேட்டியளித்தார் தோனி.

இந்தச் சம்பவத்தை அடுத்து போட்டியின் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் தோனி மற்றும் முஸ்தாபிசர் ஆகிய இருவருக்கும் அபராதம் விதித்தார். சம்பளத்தொகையிலிருந்து 75% தோனிக்கும் 50% முஸ்தாபிசருக்கும் அபராதம் விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.