திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

இந்தியா, வங்கதேசம் ஒருநாள் போட்டி: மழையால் மீண்டும் பாதிப்பு நேருமா?

இந்தியா, வங்கதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தாக்காவில் நாளை நடைபெறுகிறது.

Updated On :17 ஜூன் 2015, 8:13 pm

இந்தியா, வங்கதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தாக்காவில் நாளை நடைபெறுகிறது. ஏற்கெனவே டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருநாள் போட்டியும் பாதிப்புக்குள்ளாகும் நிலைமை உள்ளது.

தோனி தலைமையிலான இந்திய அணி, நாளை வங்கதேசத்துடனான முதல் ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய அணி ஆடும் ஒருநாள் போட்டி இது. உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற வீரர்கள் இதிலும் இடம்பிடிப்பார்கள். முகமது ஷமிக்குப் பதிலாக புவனேஷ்வர் குமார் ஆடுவார். முரளி விஜய் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தேர்வானதால் ஷிகர் தவனும் ரோஹித் சர்மாவும் நாளைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இருப்பார்கள்.

மிர்புர் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமானது என்று சொல்லப்பட்டாலும் மழையால் அதன் தன்மை மாறக்கூடும். ஃபதுல்லாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 185 ஓவர்கள் மட்டுமே வீசமுடிந்தது. இந்த ஒருநாள் போட்டியும் மழையால் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் நாளை 100 ஓவர்களுக்கு போட்டி நடந்தால் அதிர்ஷ்டமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.