/

இந்திய அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமனம்!

சஞ்சய் பங்கர், பேட்டிங் பயிற்சியாளராகவும் பரத் அருண் பவுலிங் பயிற்சியாளராகவும் ஆர். ஸ்ரீதர் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் ...

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:39 am

எழில்

வங்கதேசம் செல்லும் இந்திய அணிக்கான இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் தோல்விக்குப் பிறகு ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநர் ஆனார். ப்ளெட்சருக்குப் பிறகு புதிய பயிற்சியாளர் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படாததால் சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராகத் தொடர்கிறார்.

சஞ்சய் பங்கர், பேட்டிங் பயிற்சியாளராகவும் பரத் அருண் பவுலிங் பயிற்சியாளராகவும் ஆர். ஸ்ரீதர் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பிசிசிஐயின் ஆலோசனைக் குழுவில் உள்ள சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் இந்திய அணியின் பயிற்சியாளரை விரைவில் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச சுற்றுப்பயணத்தில் இந்திய அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.