சென்னை போட்டி: தோல்வியைத் தவிர்க்க இந்தியா ஏ அணி போராட்டம்!
அதிகபட்சமாக முகுந்த் 59 ரன்கள் எடுத்தார். கருண் நாயர் 31, ஸ்ரேயாஸ் ஐயர் 48, நமன் ஓஜா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.


இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. 3-வது நாளின் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது. 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஏ அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.
2-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. ஓ'கீஃபி 36 ரன்களுடனும், பெக்கீட்டி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தார்கள்.
இன்று ஆட்டத்தைத் தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி 349 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியா ஏ அணியின் பாபா அபரஜித் 5 விக்கெட்டுகளையும் ஓஜா 4 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா ஏ அணி, 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. புஜாரா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தமுறை சிறப்பாக ஆடிய விராட் கோலி, 45 ரன்களில் அவுட் ஆனார். இந்தியா ஏ அணி பேட்ஸ்மேன்கள் பலரும் சிறப்பாக ஆடினாலும் களத்தில் யாராலும் நீண்டநேரம் தாக்குப் பிடிக்கமுடியவில்லை.
அதிகபட்சமாக முகுந்த் 59 ரன்கள் எடுத்தார். கருண் நாயர் 31, ஸ்ரேயாஸ் ஐயர் 48, நமன் ஓஜா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
3-வது நாளின் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 83 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்துள்ளது. அபரஜித் (28), ஸ்ரேயாஸ் கோபால் (0) ஆகியோர் களத்தில் உள்ளார்கள். 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மீதமுள்ள இந்தியா ஏ அணியின் விக்கெட்டுகளைக் குறைந்த ரன்களுக்குள் எடுத்துவிட்டால் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி வெல்ல அதிகம் வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...