சச்சின் டெண்டுல்கரின் மகனான 15 வயது அர்ஜூன், கிரிக்கெட் தொடர்பான பயிற்சிகளை இங்கிலாந்தில் மேற்கொண்டு வருகிறார். ஆஷஸ் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் பயிற்சி முகாமிலும் அவர் இணைந்துள்ளார். பவுலிங் பயிற்சியில் ஈடுபட்ட அர்ஜூனின் வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஆஷஷ் டெட்ஸ் போட்டிக்காக இங்கிலாந்து அணி வீரர்கள் லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டபோது சச்சின் மகனையும் அவர்களுடன் காணமுடிந்தது. அர்ஜூனுக்கு இங்கிலாந்து அணியின் பவுலிங் பயிற்சியாளர் கிப்சன் பயிற்சி அளித்தார்.
சச்சினின் நண்பரும் முன்னாள் கவுண்டி கிரிக்கெட் வீரருமான நீல் பர்ன்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் துணைப் பயிற்சியாளரிடம் சச்சினை பயிற்சியில் சேர்த்துக்கொள்ளமுடியுமா என்று கோரிக்கை வைத்தார். இதற்கு உடனே சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அர்ஜூன் இங்கிலாந்து அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். இங்கிலாந்து கூடாரத்தில் சச்சின் மகன் பயிற்சியில் ஈடுபட்டது கிரிக்கெட் உலகை ஆச்சரியப்படுத்தியது. இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியின்போது வாசிம் அக்ரம், அர்ஜூனுக்குப் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது அர்ஜூன் பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. முதல்முறையாக அர்ஜூனின் பவுலிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் பரவசமாகியுள்ளார்கள்.
பேட்ஸ்மேனாக இதுவரை அறியப்பட்டு வந்த அர்ஜூன், இப்போது ஆல்ரவுண்டராகும் முயற்சியில் ஈடுபடுவது தெரிகிறது. இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களின் தேவை எப்போதும் இருக்கும். அர்ஜூன் இந்திய அணியில் ஒரு ஆல்ரவுண்டராக இடம்பெற வாய்ப்புண்டா? காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாடுகளிலிருந்து வந்த வாக்காளா்கள்

அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடி: வாக்காளா்கள் அதிருப்தி

துத்துக்குடியில் முதல்முறை வாக்காளா்கள் உற்சாகம்

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


