ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

3-வது டெஸ்ட்: இலங்கையைத் தோற்கடித்து பாகிஸ்தான் சாதனை

இந்த டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை யூனிஸ் கான் பெற்றார்.

Updated On :7 ஜூலை 2015, 10:48 am

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் 382 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது பாகிஸ்தான் அணி.

பல்லேகெலேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், நான்காவது இன்னிங்ஸில் 377 ரன்கள் என்கிற இலக்குடன் ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத், யூனிஸ் கான் ஆகியோர் அபாரமாக ஆடி சதம் அடித்தார்கள். 125 ரன்களில் மசூத் அவுட் ஆனாலும் 171 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் யூனிஸ் கான்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச 6-வது சேஸ் இதுவாகும். பாகிஸ்தானின் அதிகபட்ச சேஸும் இதுதான். ஆசிய அளவில் இது இரண்டாவது அதிகபட்ச சேஸ்.

இதன்மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி. 2006-க்குப் பிறகு அந்த அணி இப்போதுதான் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இதன்மூலம் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை யூனிஸ் கான் பெற்றார்.

3-வது டெஸ்ட் போட்டி:

இலங்கை 278 (கருணாரத்னே 130, யாசிர் 5-78) மற்றும் 313 (மேத்யூஸ் 122, சண்டிமல் 67, இம்ரான் 5-58)

பாகிஸ்தான் 215 (சர்ஃப்ராஸ் 78*, அசார் 52) மற்றும் 382/3 (யூனிஸ் 171*, மசூத் 125, மிஸ்பா 59*)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.