மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

ஆமிர் விவகாரம்: ஹபீஸ், அலி பயிற்சியில் பங்கேற்க சம்மதம்

வேகபந்து வீச்சாளர் முகம்மது ஆமிர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஹபீஸ், அலி

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:54 am

PTI

தடைக்குப் பின் இளம் வேகபந்து வீச்சாளர் முகம்மது ஆமிர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமுக்கு மீண்டும் அழைக்கப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மூத்த வீரர்கள் முகம்மது ஹபீஸ், அஸார் அலி ஆகியோர் சமாதானமடைந்ததாகத் தெரிகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கானை சந்தித்த இரு மூத்த வீரர்களும் மீண்டும் பயிற்சி முகாமில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் முகம்மது ஆமிர், சல்மான் பட், முகம்மது ஆசீப் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி அவர்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஓவரில், குறிப்பிட்ட பந்தை 'நோ-பால்' ஆக வீசிய விவகாரம் வெளியானதால், அவர்கள் மீது தடை விதிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தண்டனைக் காலம் நிறைவடைந்ததையடுத்து பாகிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஆமிர், உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்று வரும் தேசிய வீரர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக முகம்மது ஆமிர் அழைக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாகிஸ்தானின் மூத்த வீரர்கள் முகம்மது ஹபீஸ், ஒருநாள் போட்டி கேப்டன் அஸார் அலி ஆகியோர் பயிற்சி முகாமை புறக்கணித்தனர்.

போராட்டம் நடத்திய மூத்த வீரர்களை இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கானை சந்தித்து பேசினர்.

''மூத்த வீரர்கள் சுட்டிக்காட்டிய சில குறைகளை கவனமுடன் கேட்டேன். எனினும், அவர்களது சில கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆமிர் விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு வீரர்கள் கட்டுப்பட வேண்டும்'' என அவர் மூத்த வீரர்களிடம் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஹபீஸ், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கலங்கத்தை ஏற்படுத்தியவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றார். எனினும், கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு, பயிற்சி முகாமில் பங்கேற்கவிருப்பதாக கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.