ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி
36 வருடங்களுக்குப் பின்னர் பிரேசிலின் ரியோ-டி-ஜெனீரோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.


ஈரோஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இங்கிலாந்து அணி ஸ்பெயினைத் தோற்கடித்தது. இதனையடுத்து இந்திய மகளிர் ஹாக்கி அணி ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச ஹாக்கி சங்கம் அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி கடந்த 1980-ம் ஆண்டு கடைசியாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடியது. அதன்பிறகு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது, 36 வருடங்களுக்குப் பின்னர் பிரேசிலின் ரியோ-டி-ஜெனீரோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.
ஒலிம்பிக் ஹாக்கி மகளிர் அணிகளில் 10வது அணியாக இந்திய அணி தேர்வாகியுள்ளது. மீதமுள்ள இரு அணிகள், ஓசியானியா கோப்பை, ஆப்ரிக்கா கோப்பை ஆகிய போட்டிகளின் முடிவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...