எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

3-வது டெஸ்ட்: முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு! இந்தியா 50/2

முதல்நாள் முடிவில் இந்திய அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:33 am

சநகன்

இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாளில், இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்களை எடுத்துள்ளது.
மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில், முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா - இலங்கை ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியே தொடரை வெல்லப் போகும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய ஆட்டமாக விளங்குகிறது.இரு அணிகளும் தொடரை வெல்லும் முனைப்பில் இருப்பதால், மூன்றாவது டெஸ்டில் வெற்றிவாகை சூடி கோப்பையைக் கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் முரளி விஜய், சஹாவுக்குப் பதிலாக புஜாரா, நமன் ஓஜா ஆகியோர் இடம்பிடித்தார்கள். இலங்கை அணியில் சங்ககாரா, முபாரக், சமீராவுக்குப் பதிலாக பெரேரா, பிரதீப், தரங்கா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.

முதல் ஓவரிலேயே ராகுலின் விக்கெட்டை கைப்பற்றினார் தம்மிகா பிரசாத். பிறகு நான்காவது ஓவரில் ரஹானே, பிரதீப்பின் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த கோலி - புஜாரா கவனமாக ஆடினார்கள். 15-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. வீரர்கள் பெவிலியனுக்குத் திரும்பினார்கள். மழையால் முன்னதாகவே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகும் மழை நிற்கவில்லை. தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தது. இதனால் முதல் நாள் ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனது. முதல்நாள் முடிவில் இந்திய அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 19, கோலி 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.