/

ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஓய்வு பெறுகிறேன்: மைக்கேல் கிளார்க் அறிவிப்பு!

கடந்த 6 டெஸ்டுகளில் ஒருமுறைகூட அவர் 50 ரன்களைத் தாண்டவில்லை.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:24 am

எழில்

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிக மோசமாக ஆடி வருகிறது. இதற்குப் பொறுப்பேற்கும் விதமாக ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் ஓய்வு பெறுகிறார் கிளார்க். இது தொடர்பான அறிவிப்பை இன்று அவர் அறிவித்தார். 

Story image

ஏப்ரல் 2011 முதல் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக உள்ளார் கிளார்க். வெளிநாட்டில் 9 டெஸ்ட் தொடர்களில் 4-ல் மட்டும் வெற்றி பெற்ற கிளார்க், தன் சொந்த மண்ணில் ஒருமுறை மட்டுமே டெஸ்ட் தொடரை இழந்துள்ளார் (2012ல், தென் ஆப்பிரிக்கா). கடந்த 6 டெஸ்டுகளில் ஒருமுறைகூட அவர் 50 ரன்களைத் தாண்டவில்லை. கடந்த 13 டெஸ்டுகளில் 2 சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இதனால், வங்கதேசம் செல்லும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் கேப்டனாக இருப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.