தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

8 ஆஸி. வீரர்கள் இனி டெஸ்ட் ஆட வாய்ப்பில்லை: ரிக்கி பாண்டிங்

வாட்சன், ஹேடின், ரியான் ஹாரிஸ், ரோஜர்ஸ் ஆகியோர் இனி ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற...

News image
Updated On :8 ஆகஸ்ட் 2015, 10:46 am

ஆஷஸ் போட்டியில் இடம்பெற்றுள்ள 8, ஆஸ்திரேலிய வீரர்கள் இனி டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பில்லாமல் போகும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் தோற்று ஆஷஸ் தொடரை இழந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி குறித்து க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்தில் பாண்டிங் கூறியதாவது:

இந்தச் சுற்றுப் பயணத்தில் ஆடுகிற 8 ஆஸ்திரேலிய வீரர்கள் இனி டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லாமல் போகலாம். இது பெரிய அதிர்ச்சி. பாதி ஆஸ்திரேலிய அணி காணாமல் போகும்.

உண்மை என்னவென்றால் ஆஸ்திரேலியா 60 ரன்னில் ஆல் அவுட் ஆன பிட்சில், இங்கிலாந்து 391 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா நன்றாக பேட்டிங்கும் செய்யவில்லை, பெளலிங்கும் செய்யவில்லை. இப்போது மீண்டும் 241 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இத்தனைக்கும் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான சூழல் இருந்தநிலையிலும் என்றார்.

மேலும், 8 பேரில் 4 வீரர்களின் பெயர்களைக் அவர் குறிப்பிட்டுள்ளார். வாட்சன், ஹேடின், ரியான் ஹாரிஸ், ரோஜர்ஸ் ஆகியோர் இனி ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.